இந்தியாவில் 24 மணி நேரத்தில் 540 பாசிட்டிவ்கள்: மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர்கள் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,835லிருந்து 14,378ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 452லிருந்து 480ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,767லிருந்து 1,992ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதேபோல் உலகளவில் 22,26,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 5,63,670 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், உலகளவில் 1,50,597 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 7,09,735ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை 37,154ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

100 டன் மருந்து மாத்திரைகள் டெலிவரி: தபால் ஊழியர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை இருக்கும்

அஜித், விஜய்க்கு ஆபத்து இல்லை, ஆனால் அவமானம்: பிரபல நடிகை டுவீட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மனித இனமே உச்சத்தில் உள்ளது. சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு

சிறையில் இருக்கும் ஏஞ்சலினா ஜோலி ரசிகைக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான சாஹர் தாபர் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஈரான் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

150 மில்லியன் டாலர்களை வழங்கி கொரோனா தடுப்பூசி ஆய்வுக்கு அழைப்பு விடுக்கும் பில் கேட்ஸின் அறக்கட்டளை!!!

உலகின் பெரிய பணக்காரராக இருந்துவரும் பில் கேட்ஸின் பில் & மெலிண்&#

கொரோனாவால் குணமானவரை ஊருக்குள் அனுமதிக்காத பொதுமக்கள்: புதிய தீண்டாமையா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்த ஆந்திர டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்