கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில் 500 வீடியோக்கள் நீக்கம்: சென்னை போலீசார் அதிரடி

  • IndiaGlitz, [Tuesday,July 21 2020]

கருப்பர் கூட்டம் என்ற 'யு டியூப்' சேனலில் சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ வெளியானதால் முருகபக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சேனலின் நிர்வாகி செந்தில்வாசன் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகி சுரேந்தர் நடராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும் என்று தொடர்ந்து இந்துமத ஆதரவாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து அமெரிக்காவில் உள்ள யு டியூப் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கடிதம் எழுதியதாக வெளிவந்த தகவலை பார்த்தோம்.

இந்த நிலையில் கருப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். நீக்கப்பட்ட 500 வீடியோக்களும் இந்துமத கடவுள் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோக்களாக இருந்ததால், அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சேனலில் ஒரு வீடியோ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கீழடியில் ரூ.12.21 கோடி மதிப்பிலான தொல்பொருள் அருங்காட்சியகம்!!! அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்!!!

2600 ஆண்டு பழமையான தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணம் பல்வேறு தொல்லியல் பொருட்கள் சிவகங்கை அருகேயுள்ள திருப்புவனத்தில் கண்டெடுக்கப் பட்டது.

வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தாரா நளினி: பரபரப்பு தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ஏழு பேர்களில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவர் என்பது தெரிந்ததே

பார்ட்னர் ஷிப்பில் இந்திய-அமெரிக்க கப்பற்படை!!! அரண்டுபோன சில நாடுகள்!!!

இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட குழப்பம் கடந்த சில மாதங்களாக இருநாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மகளால் சீயான் விக்ரமுக்கு கிடைத்த பதவி உயர்வு: குவியும் வாழ்த்துக்கள்

சமீபத்தில் திருமணமான மகளால் சீயான் விக்ரமுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்