close
Choose your channels

50 வயது நடிகையுடனான காதலை முறித்து கொண்டாரா 38 வயது நடிகர்? மாறி மாறி சர்ச்சை பதிவு..!

Sunday, June 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

50 வயது நடிகை 38 வயது நடிகர் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் இருவரும் மாறி மாறி தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதை பார்க்கும் போது இருவரும் பிரிந்து விட்டார்களோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாலிவுட் திரையுலகில் நடிகைகளின் ஒருவரான மலைக்கா அரோரா, கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு, நடிகர் அர்ஜுன் கபூர் என்பவர் உடன் காதலில் உள்ளார். மலைக்கா அரோராவுக்கு 50 வயது என்ற நிலையில் அர்ஜுன் கபூருக்கு 38 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த தகவலை இருவருமே மறுத்தனர். ஆனால் அர்ஜுன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’வாழ்வில் நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன, கடந்த காலத்தில் சிறைபட்டு கிடப்பது, எதிர்கால சாத்தியங்களை தேடி செல்வது’ என பதிவு செய்து திடீரென அதை டெலிட் செய்து விட்டார்.

இதனை அடுத்து மலைக்கா அரோராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’உன்னால் இதை செய்ய முடியாது என்று யாராவது கூறினால், அதை இரண்டு முறை செய்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இவ்வாறு மாறி மாறி இருவரும் சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்து வரும் நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்களோ என்று ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.