கள் குடித்து ஒருவர்பின் ஒருவராக 5 பேர் உயிரிழந்த சோகம்!

  • IndiaGlitz, [Thursday,February 03 2022]

ஆந்திர மாநிலத்தில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளைக் குடித்து பழங்குடியினர் 5 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ராஜவொம்மாங்கி அடுத்த லோதொட்டி எனும் மலைக்கிராமத்தில் வசிக்கும் 5 பேர் நேற்று பனங்கள்ளைக் குடிக்கச் சென்றுள்ளனர். அந்தக் கள்ளை குடித்தப் பின்பு அவர்கள் ஒருவர்பின் ஒருவராக மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று மாதிரிகளை சேகர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை குடித்ததாலேயே 5 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கிராம வாசிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

More News

சுசீந்திரனின் அடுத்த படத்தின் டைட்டில் மாற்றம் ஏன்? அவரே கொடுத்த விளக்கம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கியுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 இந்திய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு… வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டி?

3 ஒருநாள், 3 டி20 போட்டிக்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்தியாவிற்கு வருகை

சிம்பு பிறந்த நாளில் டபுள் ட்ரீட் கொடுத்த 'பத்து தல' படக்குழு!

நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த கேமிலும் புரியாத மாதிரி நடிக்காதீங்க: தாமரையை வெளுத்து வாங்கிய சுரேஷ்

இந்த கேமிலும் புரியாத மாதிரி நடித்து மேலே போகலாம் என்று எதிர்பார்க்காதீர்கள் என தாமரையை சுரேஷ் சக்கரவர்த்தி வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது

பிரம்மாண்ட படத்தில் சம்பளமே வாங்காமல் வேலைப்பார்த்த அனிருத்… ஏன் தெரியுமா?

இந்திய சினிமாவில் முக்கியத்துவம் பெற்ற இயக்குநர்களுள் ஒருவரான எஸ்எஸ் ராஜமௌலிக்காக இசையமைப்பாளர் அனிருத்