தாஜ்மஹால் டிக்கெட் கவுண்டர் அருகே 5 அடி நீள பாம்பு: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,April 08 2021]

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் உள்ள டிக்கெட் கவுண்டர் அருகே 5 அடி நீள பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை தாஜ்மஹால் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் அருகே 5 அடி பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தாஜ்மஹால் டிக்கெட் கவுண்டருக்கு வந்து அங்கிருந்த பாம்பை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிடித்தனர். இதனை அடுத்து அந்த பாம்பு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது

சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் தாஜ்மஹாலில் திடீரென 5 அடி நீளத்தில் பாம்பு கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும் உடனடியாக தாஜ்மஹால் அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததற்கு நன்றி என்றும் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்