கடவுளின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இது... விராட் கோலியின் உருக்கமான பதிவு!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடிகை அனுஷ்கா தம்பதியினர் இன்று தங்களுடைய 4 ஆம் ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது கடவுள் எங்களுக்கு அளித்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று விராட் கோலி பதிவிட்டு உள்ளார்.

நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து, கடந்த டிசம்பர் 11, 2017 இல் திருமணம் செய்துகொண்டனர். இத்தாலி நாட்டின் டஸ்கனியில் நடைபெற்ற இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் பெரும் ஆச்சர்யத்தையும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கடந்த ஜனவரி 11,2021 இல் இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. வாமிகா எனப் பெயரிட்டு தற்போது ஒரு குடும்பமாக மாறியிருக்கும் நடிகை அனுஷ்கா- விராட் கோலி தம்பதிகள் தங்களது 4 ஆம் ஆண்டு திருமண தினத்தை உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்துப் பகிர்ந்துகொண்ட விராட் கோலி, என்னுடைய முட்டாள் தனமான நகைச்சுவைகளையும் சோம்பேறித் தனங்களையும் நீங்கள் நன்றாக கையாண்டீர்கள். அதோடு கடந்த 4 வருடங்களில் நானாக இருக்கும் நிலையில் என்னை ஏற்றுகொண்டு நேசித்து வருகிறீர்கள். கடவுள் நம் மீது பொழிந்திருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதத்தின் 4 ஆண்டுகள் இது.

மேலும் நேர்மையான, அன்பான, துணிச்சலான பெண்ணை திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகிறது.. உலகம் முழுவதும் எதிராக நின்றாலும் சரியான விஷயத்தில் நிற்க என்னை தூண்டியவர் என தனது மனைவி அனுஷ்கா குறித்து நெகிழ்ச்சியோடு பதிவிட்டு உள்ளார்.


அதேபோல நடிகை அனுஷ்கா சர்மாவும் உணர்ச்சிகளுக்கு மத்தியில் இருவரும் சரிசமமாக வாழ்வது கடினம். அதற்கு பாதுகாப்பான துணை தேவை. அந்த வகையில் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு வாழும் நாம் அதிர்ஷ்டசாலிகள் எனப் பதிவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அனுஷ்கா மற்றும் விராட் கோலி தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

More News

ரஜினி வீட்டின் முன் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை டைட்டில் பட்டம் இந்த ஜோடிக்கு தான்! குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது என்பதும் தெரிந்ததே.

விஜய்யின் 'பீஸ்ட்': மாஸ் புகைப்படத்துடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில்

மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரேஸில் களமிறங்கும் ஜெய்!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் அஜித் மோட்டார் ரேஸில் கலந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அஜித்தை அடுத்து நடிகர் ஜெய்யும் மோட்டார் பந்தயங்களில்

அச்சுறுத்தும் ஒமைக்ரான்… 144 தடை உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக டிசம்பர் 11,12 ஆகிய இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு