5000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு: புதிய உச்சத்தால் தமிழகத்தில் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Sunday,July 19 2020]

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 4000க்கும் அதிகமாக இருந்த நிலையில் ஒன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,70,693 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,859 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 78 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2481 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4059 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 117,915 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 52,993 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 19,32,492 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

'சூரரை போற்று' ஒரு நிமிட வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து சென்சாரில் 'யூ' சான்றிதழும்

இன்று ஒரே நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா: தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஒருசில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசன் அவர்கள் கொரோனாவால்

வேறொரு பெண்ணை மனைவி என்று அறிமுகப்படுத்திய பீட்டர்பால்: போட்டு உடைக்கும் துணை இயக்குனர்

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால் திருமணம் கொரோனா பரபரப்பையும் மீறி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துணை இயக்குனர் ஒருவர் பீட்டர்பால் குறித்து தனது முகநூலில் பதிவு செய்துள்ள தகவல்

அகில இந்திய அளவில் ரஜினி, அக்சயகுமாரை முந்திய தளபதி விஜய்!

கொரானா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்பதும் இனி எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது தெரியாத நிலை

அஜித், விஜய் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்தது ஒரே நபரா? பரபரப்பு தகவல்

தல அஜித் வீட்டில் நேற்று வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட