3வது நாளாக 5000ஐ நெருங்கிய கொரோனா: சென்னையில் வழக்கம்போல் 1000 பிளஸ்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக 5000ஐ நெருங்கியுள்ள நிலையில் இன்றும் 5000ஐ நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 4965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 180,643 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88,377 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 75 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2626 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 126,670 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 51066 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 20,35,645 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

கந்தசஷ்டி விவகாரத்திற்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும்: பிரபல அரசியல் தலைவர்

கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என பிரபல அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார் 

தமிழகத்தின் முக்கிய நகரில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இருந்து வருவதால் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறைந்த கொரோனா மரணம் கொண்ட நாடுகளுள் இதுவும் ஒன்று!!! கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி!!!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைந்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி இருக்கிறது.

இவங்களாலதான எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கல… மனம் திறந்த முன்னாள் தமிழக பேட்ஸ்மேன்!!!

தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமானவர் சுப்ரமணியம் பத்ரிநாத்.

மனைவியின் கள்ளக்காதலால் குழந்தைகளுடன் விஷம் குடித்த கணவர்: அதிர்ச்சி சம்பவம்

மனைவியின் கள்ளக் காதலால் அவமானம் அடைந்த கணவர் ஒருவர் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது