45 வயது பெண்ணுடன் 29 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரின் மரணத்திற்கு பின் தெரிந்த உண்மை!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

29 வயது இளைஞர் ஒருவர் 45 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்தது இருவரின் மரணத்திற்கு பின்னர் தெரிய வந்துள்ளதால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயது துரைக்கண்ணன் என்பவர் சாலை விபத்தில் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் துரைக்கண்ணனின் எதிர் வீட்டில் குடியிருக்கும் 45 வயது பெண் ஜெகஜோதி என்பவர் சுடுகாட்டிற்குச் சென்று புதைக்கப்பட்ட துரைகண்ணனின் உடலை தோண்டி எடுக்க முயற்சித்து கொண்டிருந்தார். அப்போது துரைகண்ணனின் உறவினர்கள் பார்த்து ஜெகஜோதியை எச்சரித்தனர். இதன்பின் சோகத்துடன் வீட்டிற்கு சென்ற ஜெகஜோதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஜெகஜோதி, துரைகண்ணனின் சடலத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததும் அதன்பின் தற்கொலை செய்து கொண்டதும் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்க, காவல்துறையினர் விசாரணை செய்தபோது துரைகண்ணனுக்கும் ஜெகஜோதிக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்துள்ளது.

கள்ளகாதலன் சாலை விபத்தில் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல்தான் ஜெகஜோதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெகஜோதி தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை கூட கருத்தில் கொள்ளாமல் கள்ளக்காதலனுக்காக தற்கொலை செய்து கொண்டது அவருடைய உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருவரும் உயிரோடு இருந்தபோது தெரியாத கள்ளக்காதல் மரணத்திற்குப்பின் தெரிய வந்துள்ளதால் இருதரப்பு உறவினர்களும் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

More News

ஒரு ஆப்பிள் போனை வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்றவர் கதி! பதைக்க வைக்கும் தகவல்!!!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சந்தைக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கும்.

திருமண நாளில் மனைவி அனுப்பிய பால்கொழுக்கட்டை: பிக்பாஸ் போட்டியாளர் நெகிழ்ச்சி!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரி நேர்மையுடன் விளையாடி வருவதாகவும் அவர் இறுதி வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன 

கொரோனா, எபோலாவைவிட கொடிய வைரஸால் புது ஆபத்து??? பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா, எபோலாவைவிட புது கொடிய வைரஸின் பாதிப்புகளைப் பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணுங்க: நெட்டிசனுக்கு சாட்டையடி பதில் கொடுத்த குஷ்பு!

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு சென்ற கார் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் இந்த விபத்து குறித்து கேலி செய்து டுவீட் ஒன்றை பதிவு செய்த நெட்டிசனுக்கு 'கொஞ்சமாவது

லாஸ்லியா தந்தை மரணம் எப்படி நேர்ந்தது? கனடா அரசின் பிரேத பரிசோதனை சான்றிதழ்!

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற இலங்கை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்கள் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் மரணம் அடைந்தார்.