ஒரே தெருவில் நேற்று 19, இன்று 40: சென்னையில் கோரத்தாண்டவமாடும் கொரோனா

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியின் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஒரு தகவல் உறுதி செய்த நிலையில் இன்று அதே தெருவில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள வி.ஆர்.பிள்ளை என்ற தெருவில் நேற்று 19 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதே தெருவில் மேலும் 21 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் விஆர் பிள்ளை தெருவில் 40 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐஸ் ஹவுஸ் பகுதியிலும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் கொரோனா தொற்றும் மையமாக சென்னை மாறியுள்ளதோ என்ற அச்சம் சென்னை பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

More News

ராகவா லாரன்ஸ் உதவியால் கொரோனா பாதித்த பெண்ணுக்கு நடந்த பிரசவம்

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 4 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அரிசிகள் உள்பட ஏராளமான பொருட்களையும் ஏழை எளிய மக்களுக்கு அவர் வழங்கி வருகிறார்

ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடியது

எத்தனை கோடி கொடுத்தாலும் வேண்டாம்: தளபதி விஜய் உறுதி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 9ம் தேதியே ரிலீசாக வேண்டிய நிலையில் தற்போதைய கொரோனா பாதிப்பு காரணமாக

மீண்டும் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பால் பரபரப்பு

ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்காக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என்பதும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பால்,

கொரோனா பீதியில் சுரங்கம் தோண்டி தப்பிக்க முயன்ற சிறை கைதிகள்!!!

கொரோனா பரவல் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் சிறை கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற பதட்டம் நிலவிவருகிறது.