close
Choose your channels

தமிழ் நடிகரிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Sunday, June 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய நடிகர் கருணாஸ் சென்னை விமான நிலையத்திற்கு வரும்போது அவர் வைத்திருந்த கைப்பையில் 2 பாக்ஸ்களில் இருந்த துப்பாக்கி குண்டுகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தன்னிடம் துப்பாக்கி லைசென்ஸ் இருப்பதாகவும், அதற்கான குண்டுகள் தான் இவை எனவும் கருணாஸ் விளக்கம் அளித்ததாகவும், விமானத்தில் துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பது தெரியும், ஆனால் அவசரமாக புறப்பட்டதால், பையில் இருந்த குண்டுகளை கவனிக்கவில்லை என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கருணாஸ் விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானத்தில் பயணிக்க கருணாஸுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக திருச்சிக்கு செல்லும் விமானம் புறப்பட்டு சென்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.