கடன் தொல்லையால் ஒரு குடும்பமே ரயில் முன்பாய்ந்து தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

கொரோனா நேரத்தில் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வதற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலை வாய்ப்பை இழந்த ஒரு குடும்பம் தற்போது ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டம் ராயபாக் அடுத்த பீராடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சதப்பா அண்ணப்பா சுதார் (60). இவரது மனைவி மகாதேவி (50) மற்றும் தத்தாத்ரேயா (28), சந்தோஷ் (25) எனும் இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா நேரத்தில் இரண்டு மகன்களும் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்பச் செலவுகளுக்காக சதப்பா பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார்.

அந்தக் கடனை திரும்ப கொடுக்குமாறு தினமும் கடன்காரர்கள் வீடு தேடி வந்துள்ளனர். ஆனால் சதப்பாவிற்கு வருமானம் இல்லாமல் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது மனைவியிடம் கூறி இருக்கிறார். இதைக் கேட்ட அவரது மனைவி மற்றும் மகன்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் உங்களோடு சேர்ந்து நாங்களும் தற்கொலை செய்து கொள்கிறோம் எனத் தெரிவித்து இருக்கின்றனர்.

இதனால் நேற்று ராயபாக் ரயில் நிலையத்திற்கு சென்ற அந்த குடும்பம் ரயில் நிலையத்தை தாண்டி சிறிது தூரத்தில் அவ்வழியாக வந்த ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் இவர்களின் உடல் சிதறி கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தாகக் கூறப்படுகிறது. மேலும் சதப்பா குடும்பம் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு காரணம் இருக்கிறதா? என்பதைக் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More News

சென்னையில் அடுத்த தலைமுறை இ-பைக்குகள்… துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் புதிய இ-பைக்குகள், அதை சார்ஜ் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான செல்பி பாயிண்ட் மற்றும் அடுத்த தலைமுறை ஜென் சைக்கிள்கள் போன்றவை இயக்கப்பட உள்ளன.

5 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி காரியம்… வைரல் வீடியோ!

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு வீடியோவில் 5 வயது சிறுவன் லேண்ட் க்ரூசர் காரை அசால்ட்டாக ஓட்டுகிறான்

தலைநகர் டில்லியில் திடீர் குண்டுவெடிப்பு…  இஸ்ரேல் தூதரம் அருகே நிகழ்ந்ததால் பதற்றம்!!!

​​​​​​​இன்று (29.01.2021) மாலை தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே திடீர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ஹரி-அருண்விஜய் படத்தின் அடுத்த ஆச்சரிய அப்டேட்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் அருண்விஜய்யின் 33வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம்