close
Choose your channels

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி: தமிழக பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

Friday, May 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக அதிகமான பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருந்தது ஆறுதலான செய்தியாக இருந்தது. தமிழகத்தில் 5000க்கும் அதிகமானோர்களும், சென்னையில் 2600க்கும் அதிமானோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழகத்தின் உயிரிழப்பு 37ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் அடுத்தடுத்து நான்கு பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த 56 வயது கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரி ஒருவரும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

அதேபோல் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 78 வயது நபர் ஒருவரும், ராயப்பேட்டையை சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 4 உயிர்கள் பலியாகியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment