சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி: தமிழக பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

கொரோனா வைரஸால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக அதிகமான பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருந்தது ஆறுதலான செய்தியாக இருந்தது. தமிழகத்தில் 5000க்கும் அதிகமானோர்களும், சென்னையில் 2600க்கும் அதிமானோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழகத்தின் உயிரிழப்பு 37ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் அடுத்தடுத்து நான்கு பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த 56 வயது கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரி ஒருவரும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

அதேபோல் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 78 வயது நபர் ஒருவரும், ராயப்பேட்டையை சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 4 உயிர்கள் பலியாகியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More News

சொந்த ஊரை நோக்கி நடந்து சென்ற தொழிலாளர்கள் மீது மோதிய ரயில்: 17 பேர் பரிதாப பலி

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த சுமார் இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் எந்த போக்குவரத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, கொள்ளையரையும்‌ வெளியேற்றும்‌ காலம்‌ நெருங்கிவிட்டது: கமல்ஹாசன்

உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும்

கொரோனாவின் 53 புதிய மரபணு வரிசைகளை வெளியிட்ட இந்திய விஞ்ஞானிகள்!!!

கொரோனா வைரஸ் பரவல் பற்றிய தன்மைகளைப் புரிந்து கொள்ள உலகம் முழுவதும் ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷின் 'பிளான் பி' இதுதான்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை விஜய் சேதுபதி அறிவிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை

நெய்வேலியில் பாய்லர் வெடித்து விபத்து: 10 பேர்கள் படுகாயம்

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென இன்று காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில்