2000ஐ நெருங்கும் தமிழக கொரோனா பலி எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும் கொரோனாவால் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை தினமும் 60க்கும் மேல் உள்ளது என்பதும் தற்போது கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2000ஐ நெருங்கிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 3965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,226 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76,158 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 69 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1898 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3591 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,915 ஆகும். கடந்த சில நாட்களாகவே 3000 முதல் 4000 வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருவதால் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 36,628 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நான்காவதும் பெண் குழந்தை: 8 மாத கர்ப்பிணி மனைவியை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த கணவன்

ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் பெற்ற மனைவி, நான்காவதாக வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என்பதை அறிந்து ஆத்திரமடைந்த கணவர், 8 மாத கர்ப்பிணி என்றும் பாராமல்

அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏகளுக்கும்

தங்க மாஸ்க்கை அடுத்து வைரலாகும் வைர மாஸ்க்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார மையம் முதல் மாநில சுகாதார அமைச்சகம் வரை மக்களுக்கு அறிவுறுத்தி

ரஜினியை சந்தித்த அந்த மறக்க முடியாத தருணம்: பிரபல இயக்குனரின் மலரும் நினைவுகள்

நடிகரும் இயக்குனருமான சேரன் அவ்வப்போது தனது மலரும் நினைவுகள் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

விஜய் மில்டனின் அடுத்த படம் குறித்து சூர்யா தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய விஜய் மில்டன், கடந்த 2014ஆம் ஆண்டு 'கோலி சோடா' என்ற திரைப்படத்தை இயக்கினார்.