ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் கள்ளக்காதல்: 35 வயது பெண் மர்மமான முறையில் கொலை!

  • IndiaGlitz, [Tuesday,November 17 2020]

ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் கள்ளக்காதலில் இருந்த 35 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது நெல்லை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் முத்து பாண்டி. இவருக்கு முப்பிடாதி என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் முப்பிடாதி வீட்டிற்கு அடிக்கடி சிலர் வந்து போவதாகும் அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கள்ளக்காதலர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிந்ததை அடுத்து முத்துப்பாண்டிக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது. அவர் மனைவிக்கு அறிவுரை கூறியதாகவும், ஆனால் முப்பிடாதி தொடர்ந்து கள்ளக்காதலில் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. 

இந்த நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முப்பிடாதி தன்னுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரை மர்ம நபர்கள் சிலர் சரமாரி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முப்பிடாதியை கொலை செய்தது யார்? கள்ளக்காதலர்களில் ஒருவரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் 20 வயது இளைஞர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் ஒரு சிலரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

புது அனுபவத்திற்கு தயாரா? வைரலாகும் சூர்யாவின் வீடியோ!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில எதிர்மறையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்தாலும் பெரும்பாலானோர்

செல்லப் பிராணியுடன் வாக்கிங் போனாலும் கொரோனா வருமா??? பரபரப்பை கிளப்பும் புதுத் தகவல்!!!

கீரியிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

எம்ஜிஆர், சிவாஜியை தோற்கடித்த ஹவுஸ்மேட்ஸ்: பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கடந்த சில நாட்களாக சவாலான டாஸ்குகள் கொடுக்கப்படுகின்றன என்பதும் அந்த டாஸ்குகள் நிகழ்ச்சியை சுவராசியமாக மாற்றுகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம் 

தமிழகத்தில் பருவமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்படுவதாக அமைச்சர் பேட்டி!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை

தல அஜித்தின் 'வலிமை' அப்டேட்: எக்ஸ்க்ளூசிவ் தகவல்!

தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்