தொடர்கதையாகும் பெற்றோர்களின் அலட்சியம்: இன்றும் ஒரு குழந்தை பலி!

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

ஒரு குழந்தையை 5 வயது வரை வளர்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய கலை ஆகும். ஒரு குழந்தையை பிரசவிக்க பத்து மாதங்கள் மட்டும் போதும். ஆனால் அந்த குழந்தையை பாதுகாப்புடன் வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய சவால் என்பதை பல பெற்றோர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.

நேற்று பெற்றோர்களின் அலட்சியத்தால் சுஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தையே துயரக்கடலில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நேற்றே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த தம்பதியினரின் 3 வயது பெண் குழந்தை பாத்ரூம் தொட்டியில் தவறி விழுந்து பலியான சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்றும் மூன்று வயது குழந்தை ஒன்று கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவத்தை பார்க்கும்போது பெற்றோர்களை அலட்சியம் தொடர்கதையாக இருப்பதாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் பண்டரகோட்டையைச் சேர்ந்த மகாராஜன் - பிரியா தம்பதியின் 3 வயது மகள் பவழவேணி என்ற குழந்தை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விளையாட சென்றுள்ளது. அப்போது குழந்தை பவழவேணி வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்து பலியாகியுள்ளது.

இதில் ஒரு கொடுமை என்னவெனில் குழந்தை பலியானதை சில மணி நேரமாக யாரும் கவனிக்கவில்லை என்பதுதான். குழந்தையின் தாய் குழந்தையை தேடியபோதுதான் அந்த குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

ரூ.200 கோடியை நெருங்கும் 'பிகில்' வசூல்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 25ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

'கைதி' படத்தின் ஆச்சரியமான வசூல் விபரங்கள்

விஜய் நடித்த பிகில் என்ற பெரிய பட்ஜெட் படத்துடன் கடந்த தீபாவளி தினத்தில் துணிச்சலுடன் வெளியான 'கைதி' படக்குழுவினர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஆச்சரியத்தக்க வசூலை பெற்று வருகிறது.

இயக்குனர் பாரதிராஜா வீட்டில் ஒரு கிலோ வெள்ளி திருட்டு!

இயக்குனர் இமயம் பாரதிராஜா வீட்டில் ஒரு கிலோ வெள்ளி உள்பட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரபல வெற்றிப்பட நடிகருக்கு ஆண் குழந்தை!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா விஜய்சேதுபதியின் படம்?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'சங்கத் தமிழன்' திரைப்படம் வரும் நவம்பர் இரண்டாம் வாரம் வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது சுமார் அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.