தமிழக நிதிநிலை அறிக்கை.....! பெட்ரோல் மீதான வரி குறைப்பு...!

  • IndiaGlitz, [Friday,August 13 2021]

பெட்ரோல் மீதான வரி ரூ.3 ரூபாய் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில், திமுக அரசு ஆட்சியமைத்தால் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி பட்டியலில் கூறியிருந்தது. இதன்பின் சென்ற மே மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், திடீரென 100 ரூபாயையும் தாண்டி தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிக்கைகள் குறித்து பேசிய அவர், பெட்ரோல் மீதான மாநில அரசு வரியிலிருந்து 3 ரூபாய் குறைக்கப்படும் என்று வாசித்தார். இதனால் தமிழக அரசிற்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் பெட்ரோல் வரி குறைப்பு என்பது, நடுத்தர மக்களுக்கு நிவாரணமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்முலம் பெட்ரோல் விலை இனி குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அடுத்த மடாதிபதி நான்தான்… மதுரை ஆதீனப் பதவிக்கு அடிபோடும் நித்யானந்தா?

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதியாக இருப்பவர் அருணகிரிநாதர். இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவின்றி கவலைக்கிடமான நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார்.

கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம்: கார்த்திக் நரேன்

நான் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம் என இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சூர்யாவால் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திற்கு ஏற்பட்ட தாமதம்?

சூர்யா நடித்து வரும் படம் ஒன்றால் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தல PM...தளபதி CM....! மதுரையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை உண்டாக்கிய ரசிகர்கள்....!

நடிகர் விஜய் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி  ஆகியோர் படப்பிடிப்பு

சிங்காரச்சென்னை 2.0, சுவரொட்டி இல்லா சென்னை: தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்த 2021 - 2022 ஆம்