ரஜினியின் '2.0' டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் அடுத்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'2.0' படத்தின் டிரைலர் நவம்பர் 3ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் 4D டால்பி ஆடியோ சிஸ்டத்தில் வெளியாகவுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்களுக்கு மிக வித்தியாசமான ஆடியோ, வீடியோ அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் இரண்டு டீசர்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷு பாண்டே, ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் 550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

இத்தாலி இசை மேதையை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்

இத்தாலி இசை மேதையும், பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவருமான Ennio morricone அவர்களை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று சந்தித்தார்

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்னென்ன சாத்தியம்?

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,.

கூத்துப்பட்டறை முத்துசாமி மரணம்: நடனமாடி அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமி அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. தமிழ் திரையுலகில் இன்று பிரபல நட்சத்திரங்களாக உள்ள விஜய்சேதுபதி, விமல், பசுபதி உள்பட

சச்சின் சாதனையை முறியடித்தார் விராத் கோஹ்லி

கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இன்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முறியடித்து புதிய உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

சபரிமலை விவகாரம்: பாத்திமாவை பந்தாடிய பி.எஸ்.என்.எல்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து கடந்த வாரம் ஐயப்பன் சன்னிதானம் திறக்கப்பட்டதும் பல பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றனர்.