ரஜினி 'நாட் அவுட்', அக்சயகுமார் 'அவுட்': 2,0 படத்தின் பிரமாண்ட புரமோஷன்

  • IndiaGlitz, [Wednesday,November 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள '2.0' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்து வருவது தெரிந்ததே.

ஹாலிவுட்டில் ராட்சத பலூன், துபாயில் ஸ்கை டைவிங் புரமோஷன் என உலக அளவில் இந்த படம் ரீச் ஆகிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகளிலும் ஸ்கோர் போர்டில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முடிவடைந்த இந்திய-நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி தொடர்களிலும் இந்த படத்தின் விளம்பரம் வந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள்

இந்த நிலையில் இந்த ஸ்கோர் போர்டு விளம்பரத்தில் ஒரு பேட்ஸ்மேன் அவுட்டா, இல்லையா என்பது குறித்து மூன்றாம் நடுவரின் முடிவின்போது ஸ்கோர் போர்டில் நாட் அவுட் என்ற அறிவிப்பு வரும்போது ரஜினியின் ஸ்டில்லும், அவுட் என்று வரும்போது அக்சயகுமாரின் ஸ்டில்லும் வருகின்றது என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள்? என்பது தெரியவில்லை.

இந்த படம் வெளியாக இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இன்னும் வித்தியாசமான புரமோஷன்களை படக்குழுவினர் அளிக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சங்கத்தலைவனுடன் இணையும் விஜே ரம்யா

பிரபல தொலைக்காட்சி விஜே ரம்யா சுப்பிரமணியம், திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

கட்சி தொடங்க யாராவது தொண்டர்களிடம் பணம் கேட்டதுண்டா? அமைச்சர் ஜெயக்குமார்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ரசிகர்கள் முன் பேசியபோது 'நான் கட்சி தொடங்க எனக்கு என் ரசிகர்கள் பணம் கொடுப்பார்கள், அவர்களே என் தொண்டர்கள். அவர்கள் இருக்கும்போது எனக்கு கவலை எதற்கு?

பொதுமக்களும் வானிலையை கணிக்கலாம்: தமிழ்நாடு வெதர்மேன்

ஒரு காலத்தில் வானிலை அறிக்கை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வரும் பெயர் ரமணன் அவர்கள் தான். மழைக்காலத்தில் அவர்தான் மக்களின் ஹீரோவாக இருந்தார்.

பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசனின் புதிய குடும்ப உறுப்பினர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள் என்பதால் அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜனவரி முதல் ஒவ்வொரு அறிவிப்பாக வரும்: அரசியல் வருகை குறித்து கமல் பேட்டி

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை அடுத்து தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.