'சூர்யா 35' படத்தில் இணைந்த 2 பிரபல கா

  • IndiaGlitz, [Friday,September 16 2016]

'நானும் ரெளடிதான்' வெற்றி படத்தை அடுத்து சூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்க கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் காமெடி நடிகர்களான சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்த படத்தின் காமெடிக்கு கேரண்டி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அதற்குள் சூர்யாவின் 'எஸ்3' படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.