close
Choose your channels

28 வயது இளம் இசையமைப்பாளர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

Thursday, May 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

28 வயதான இளம் இசையமைப்பாளர் உடல் குறைவால் காலமான நிலையில் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார். இவர் ’மேதகு’ ‘ராக்கதன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த நிலையில் சில குறும்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் வேறு சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென இசையமைப்பாளர் பிரவீன் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அதிகாலை 6 30 மணிக்கு அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டது.

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மறைவு செய்தி கேட்டு திரை உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது இறுதி ஊர்வலம் சொந்த ஊரான தஞ்சையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

’மேதகு’ திரைப்படத்தில் பிரவீன் குமார் கம்போஸ் செய்த ’தமிழுக்கு அமுதென்று பேர்’என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment