close
Choose your channels

அமெரிக்க தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 27 பேர் பரிதாப பலி

Monday, November 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் சமீபத்தில் தீவிரவாதி ஒருவன் வாகனம் மூலம் பாதசாரிகளை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அமெரிக்க மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பலியாகியுள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் என்ற பகுதியில் உள்ள புகழ் பெற்ற சர்ச் ஒன்றில் திடீரென புகுந்த மர்மநபர் அங்கு வழிபாடு நடத்தி கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இந்த கொடூர சம்பவத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தர்வர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

துப்பாக்கி சூடு நடந்த்திய மர்மநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தற்போது ஜப்பான் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment