27 இளைஞர்களை திருமணம் செய்த இளம்பெண்… இரவோடு இரவாக மாயமான சம்பவம்!

  • IndiaGlitz, [Tuesday,July 18 2023]

காஷ்மீர் பகுதியில் இளம்பெண் ஒருவர் திருமணம் ஆன சில நாட்களிலேயே காணாமல் போயிருக்கிறார். இதையடுத்து அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதேபோன்று அந்த இளம்பெண் மீது 12 இளைஞர்கள் புகார் அளித்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் வசித்துவரும் இளைஞரான முகமது அல்தப் மார் என்பவர் புரோக்கர் மூலமாக பெண் தேடி கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து கடந்த ஜுலை 5 ஆம் தேதி அந்த பெண் திடீரென பணம் நகைகளுடன் வீட்டை விட்டு மாயமாகி இருக்கிறார். இதனால் அதிர்ந்து முகமது அல்தப் மார், புட்காம் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் விசாரணையில் காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தையும் அவரது விவரங்களையும் விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் இளைஞர் முகமது அல்தப்பைத் தவிர அதே இளம்பெண் மீது 12 இளைஞர்கள் புகார் அளித்திருப்பதும் அவர்கள் எல்லோரும் தங்களது மனைவியைக் காணவில்லை என்றே புகார் அளித்திருப்பதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் தீவிர விசாரணை நடத்திய போலீசார் ராஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷாஹீன் அக்தர் என்பவர் பெரிய கும்பலுடன் சேர்ந்து கொண்டு 27 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சில நேரங்களில் அந்த பெண்ணின் கணவர் உறவினர்களின் உதவியுடனே மற்ற இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.

இப்படி திருமணம் செய்துகொள்ளும் அவர் பெரும்பாலான திருமணங்களில் வெறும் 20 நாட்கள் மட்டும் வாழ்ந்துவிட்டு பின்னர் அவர்களை விட்டு, இரவோடு இரவாக ஒடிவந்துள்ளார். ஓடிவரும்போது அந்த வீட்டில் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புடகாம் பகுதியில் மட்டும் அந்த இளம்பெண் 12 இளைஞர்களை திருமணம் செய்த நிலையில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஷாஹீம் அக்தர் மொத்தம் அவர் 27 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்றும் பணம் நகைக்காக பெரிய கும்பலைச் சேர்ந்துகொண்டு இதுபோன்ற முறைகேடான சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அந்த கும்பலை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல் கூறப்படுகிறது.

More News

டிடிஎஃப் வாசனின் 'மஞ்சள் வீரன்' நாயகியும் யூடியூப் பிரபலமா?

யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் 'மஞ்சள் வீரன்' என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க இருப்பவரும் யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் என்று கூறப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் இன்ஸ்டாவுக்கு வந்த அமலாபால்.. ரீஎண்ட்ரி பிரமாதம்..!

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வருடத்திற்கு மேல் எந்தவித கிளாமர் பதிவுகளும் செய்யாத நிலையில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி, பிரமாதமான கிளாமரில் கலக்கி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அவரை

43 வயதில் நீச்சல் குளத்தில் கிளாமர் போஸ்.. அஜித் பட நடிகையின் போட்டோஷூட் வைரல்..!

நடிகர் அஜித் படத்தில் அறிமுகமாகி தமிழில் பல படங்கள் நடித்த நடிகை 43 வயதில் நீச்சல் குளத்தில் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

நடிகர் மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி இந்த பாலிவுட் பிரபலமா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் மாதவன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

'ஜென்டில்மேன் 2' படத்தின் முக்கிய பணி துவக்கம்.. கேரள அரண்மனையில் குவிந்த பிரபலங்கள்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'ஜென்டில்மேன்' என்ற திரைப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு