close
Choose your channels

சென்னையில் மட்டும்  200ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Sunday, May 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 266 பேர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனா பாதித்த பேர்களில் 266 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 203 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1458ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்து கடலூரில் 9 பேர்களும், கள்ளக்குறிச்சியில் 6 பேர்களும் கோவையில் நால்வரும், அரியலூர், மதுரை, சிவகங்கை மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதியில் தலா இருவரும் செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இன்று பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 38 பேர் குணமடைந்துள்ளதால் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவினால் இன்று ஒருவர் பலியாகியுள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 30ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment