3வது திருமணம் செய்ய 2 வயது குழந்தையை கொலை செய்த 23 வயது இளம்பெண்

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏற்கனவே 2 திருமணம் செய்த நிலையில் மூன்றாவது திருமணம் செய்வதற்காக தனது இரண்டு வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கம்மவான்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்ற 23 வயது இளம்பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துவிட்டது. முதலில் தனது தாய்மாமனை திருமணம் செய்த மஞ்சுளா அதன் பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, பின்னர் மதுரையைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும் பாண்டியனுடன்ம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மஞ்சுளா குழந்தையுடன் தனது அம்மா வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில ராஜாமணி என்பவருடன் மஞ்சுளாவுக்கு மீண்டும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் இந்தத் திருமணத்திற்கு இரண்டு வயது குழந்தை தடையாக இருந்ததால் அந்த குழந்தையை கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர். இதனையடுத்து அருகில் உள்ள பாறையில் இருந்து குழந்தையை தூக்கி எறிந்து கொலை செய்துவிட்டு அடுத்த நாளே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து குழந்தையின் பிணத்தை அந்த பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசில் தகவல் கொடுத்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை செய்த போது குழந்தையின் தாயார் மஞ்சுளா தான் என்பதும், அவர் தான் மூன்றாவது திருமணம் செய்து கொள்வதற்காக பெற்ற குழந்தையை கொலை செய்தார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ராஜாமணி, மஞ்சுளா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

மூன்றாவது திருமணம் செய்வதற்காக இரண்டு வயது பச்சிளம் குழந்தையை கொலை செய்த இளம்பெண்ணால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தை தயாரிக்கும் ரஜினி-விஜய் தயாரிப்பு நிறுவனம்!

விஜய் சேதுபதி தற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 64' உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

நடிகரை சுத்தியலால் அடித்து கொலை செய்த நடிகை: சென்னையில் விபரீதமான கள்ளக்காதல்: 

கள்ளக்காதல் விபரீதம் ஆனதால் துணை நடிகர் ஒருவரை துணை நடிகை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது

தேவதாசி விவகாரம்: தாயாருக்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி

சமீபத்தில் பாடகி சின்மயியின் தாயார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தேவதாசி முறையை தான் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.

இசைஞானிக்கு இணையான இசைக்கலைஞன் இல்லை: பாரதிராஜா புகழாராம்

இளையராஜாவும் பாரதிராஜாவும் கடந்த சில ஆண்டுகளாக கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்தாலும் சமீபத்தில் அவர்கள் சமாதானம் ஆகிவிட்டது போல் தெரிகிறது.