தமிழகத்தில் 2வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் நேற்று முதல்முறையாக கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,070 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் இன்றுதான் அதிகபட்ச கொரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 49 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1017 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இதனையடுத்து 28,641 பேர் மொத்தம் தமிழகத்தில் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் 26734 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 800,443 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

முகத்தை மட்டும் மறைத்து யாஷிகா கொடுத்த கவர்ச்சி போஸ்! நெட்டிசன்கள் விமர்சனம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக எந்தவித படப்பிடிப்பும் இல்லாத காரணத்தினால் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி

சீன பொருட்களை தூக்கி போட்டு உடைக்கும் இந்தியர்கள்: யாருக்கு நஷ்டம்?

இந்தியா மற்றும் சீனா எல்லையில் சமீபத்தில் நடந்த தாக்குதலை அடுத்து இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை அடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வந்துவிட்டது... கொரோனா வைரஸை கொல்லும் அதிநவீன முகக்கவசம்!!!

உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கின்றனர். ஆனால் இதுவரை தடுப்பூசி, சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் பட வில்லை.

கௌதம் மேனனுடன் முதல்முறையாக இணையும் தேசிய விருது பெற்ற கலைஞர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோலிவுட் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நேரத்திலும் பிஸியாக இருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன் மட்டுமே

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற பதவிக்கான தேர்தல்: மெகா வெற்றிப்பெற்ற இந்தியா!!!

ஐக்கிய நாடுகளின் சபையின் வலிமை மிக்க பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.