மும்பையில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 20 கடற்படை மாலுமிகள்!!!

  • IndiaGlitz, [Saturday,April 18 2020]

 

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலுள்ள கடற்படைத் தளத்தில் 20 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாலுமிகள் கடற்படை மருத்துவமனையான ஐ.என்.எச்.எஸ் அஸ்வினியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள INS Angre கடற்படை தளமானது கரையோர தளவாடங்கள் மற்றும் நிர்வாகத்தை கவனித்து வரும் அலுவலகமாக இயங்கி வருகிறது. மேலும் மும்பையில் இயங்கும் அனைத்துக் கப்பல் சார்ந்த விஷயங்களையும் கவனித்துவரும் தலைமை அலுவலகமாகவும் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவினால் இங்கு பணியாற்றும் அலுவலர்கள், மாலுமிகள் போன்றோர் INS Angre வுக்குச் சொந்தமான விடுதிகளிலேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் 20 மாலுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த கடற்படைத் தளத்திற்கு வந்துசென்ற நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்வதில் தற்போது கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மும்பையின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்திய ராணுவத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 20 கடற்படை மாலுமிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது.

More News

ஊரடங்கை தளர்த்த கோரும் அமெரிக்க மாகாணங்கள்!!! பதறும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!!!  

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. அதேபோல பலி எண்ணிக்கையும் 35 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

கொரோனாவில் இறந்தவர்களின் பலி எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறதா??? தொடரும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்!!!

சீனாவின் வுஹாண் மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டதாக அமெரிக்கா முதற்கொண்டு பல மேற்கத்திய நாடுகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தன.

கொரோனா விடுமுறையில் வயலில் உழுத பிரபல நடிகை!

கொரோனா விடுமுறை வந்தாலும் வந்தது, தமிழ் திரை உலகில் உள்ள பிரபல நடிகர் நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் வித்தியாசமான, காமெடியான, சீரியசான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை

நடு ரோட்டில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 'விசாரணை' பட எழுத்தாளர்!

நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' படத்தின் கதையை எழுதிய ஆட்டோ சந்திரன் என்பவர் நடுரோட்டில் பிரசவம் பார்த்தது

65 வயது வரை பணம் சம்பாதித்த பால்கனி பையன்: கமல்ஹாசனை கலாய்த்த எச்.ராஜா

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை 'பால்கனி அரசு' என விமர்சனம் செய்தார்.