கொரோனா வார்டில் 20 நாட்கள் தொடர்பணி: வீடு திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே அச்சத்தை கொடுத்து வரும் நிலையில் தற்போது மருத்துவர்களும் நர்சுகளும் மருத்துவ ஊழியர்களும் மட்டுமே பொதுமக்களுக்கு கடவுளாக தெரிகின்றனர். மருத்துவர்கள் தங்கள் வீடு குடும்பம் ஆகியவற்றை மறந்து நாட்கணக்காக விடுமுறை இன்றி மருத்துவமனையில் சேவை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு சில இடங்களில் மருத்துவர்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் மருத்துவர்களை தற்போது போற்றி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வார்டில் சுமார் இருபது நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்த பெண் ஒருவர் வீடு திரும்பிய போது அவருக்கு அவருடைய அப்பார்ட்மெண்டை சேர்ந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் சிறப்பான மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளித்தனர்

அந்த பெண் மீது மலர்கள் தூவியும் அவரை வரவேற்றனர். இந்த காட்சிகளால் நெகிழ்ந்து போன அந்தப் பெண் ஆனந்த கண்ணீர் விட்ட காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற 20 நாட்கள் தொடர்ச்சியாக பணி செய்த அந்த பெண்ணுக்கு தகுந்த மரியாதை செய்யப்பட்டுள்ளது மருத்துவர்களுக்கே கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது

More News

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதி:

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் நேற்று மரணம் அடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பாலிவுட் திரை உலகினர் மீளமுடியாத நிலையில் தற்போது பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக

இந்தியாவில் கொரோனா பாதிப்பு:  33 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்திற்கும் மேல் உள்ள நிலையில் நேற்று இந்தியாவில் 31,332 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில்

ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் பிடிபட்ட 10 பாம்புகள்!

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, 'தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அங்கு பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை

கொரோனாவிற்கு சென்னையை சேர்ந்த இளம்பெண் பலி!

தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 104 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், அதில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இர்ஃபான்கான் மறைவிற்கு மோடி, சச்சின், கமல் இரங்கல்!

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கபப்ட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான்கான் நேற்று திடீரென மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் மும்பையில் உள்ள மருத்துவமனையில்