close
Choose your channels

என்ன நடக்கப் போகிறது தமிழகத்தில்? துணை ராணுவத்தினர் திடீர் குவிப்பு

Saturday, December 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் தலைமை செயலகத்திலும் சோதனை நடைபெற்றது. வரிமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது அவர்களுக்கு பாதுகாப்பாக துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் திடீரென கூடுதலாக 20 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படையினர் தமிழகத்தில் வரவழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவுள்ளதாகவும், அதன் காரணமாகத்தான் கூடுதலாக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் உள்ள பலர் மீது விரைவில் சோதனை நடத்தப்படலாம் என புலனாய்வு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் தமிழகம் மேலும் ஒரு பரபரப்பிற்கு தயாராகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment