விசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒரு வாயுக்கசிவு  விபத்து: 2 பேர் உயிரிழப்பு  மற்றும் அதிர்ச்சி நிறைந்த தகவல்கள்!!!

  • IndiaGlitz, [Tuesday,June 30 2020]

 

விசாகப்பட்டினத்தில் அடுத்தடுத்த விஷவாயு கசிவு சம்பங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் அதிச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பர்வாடா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் ஏற்பட்ட வாயுக் கசிவு சம்பவத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பர்வாடா பகுதியில் நேரு பார்மா சிட்டி வளாகத்தில் தனியாருக்கு சொந்தமான மருந்து நிறுவனத்தில் பென்சிமிடோசோல் என்ற வாயு கசிவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த பென்சிமிடோசோல் மிகவும் அடர்த்தி நிறைந்தது என்பதால் காற்றில் அதிகமாக பரவுவது தடுக்கப் பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வாயுக் கசிவு ஏற்பட்ட உடனே அந்த மருந்து நிறுவனம் ஊழியர்களை விசாகப் பட்டிணத்தில் உள்ள RK மருத்துவமனையில் அனுமதித்தாகவும் அவர்களில் 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்தப் பகுதியை ஆய்வுச் செய்து வரும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ளனர். வாயு காற்றில் அதிகமாக கலக்க வில்லை எனவும் அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னாள் விசாகப்பட்டினத்தின் குர்னூல் என்ற பகுதியில் அமோனியா வாயுகசிந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அம்மோனியா அடர்த்தி குறைவு என்பதால் சேதம் அதிகமாக இருந்தாகவும் செய்திகள் தெரிவித்தன. அமோனியா போன்றில்லாமல் தற்போது பரவியிருக்கும் பென்சிமிடோசோல் அடர்த்தி அதிகம் என்பதால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தென் கொரியாவிற்குச் செந்தமான ALG பாலிமர்ஸ் நிறுவனத்தில் ஸ்டைரின் விஷவாயு தாக்கியதால் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புகளையும் அனுபவித்தனர். அச்சம்பவத்தை அடுத்து விசாகப்பட்டினத்தில் அடுக்கடுக்காக வாயுக்கசிவு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே வருவதால் அப்பகுதியில் தற்போது பதட்டம் நிலவி வருகிறது.

More News

மது போதைக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தளித்த கணவன்: மகளையும் சீண்டியதால் கைது!

மதுபோதைக்கு நண்பனை அடிமைப்படுத்தி நண்பனின் மனைவியை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஒருவர், நண்பனின் மகளையும் சில்மிஷம் செய்ததால் கைது செய்யப்பட்டு

கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த 2வது மனைவி: ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்

திருச்சியை சேர்ந்த ஒருவர் இரண்டு ஊர்களில் இரண்டு மனைவிகள் வைத்து வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் இரண்டாவது மனைவி ஏற்பாடு செய்த கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்

வந்தாச்சு... இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: மனிதர்களுக்கு சோதனை செய்து பார்க்க ICMR ஒப்புதல்!!!

தற்போது, உலக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி குறித்த செய்திகளைத்தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தூத்துக்குடி டிஎஸ்பி, ஏடிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: நீதிமன்றத்தின் அதிரடியால் பரபரப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பாக விசாரணை செய்த மாஜிஸ்திரேட் ஒருவரை ஒருமையில் மரியாதைக்குரிய வகையில் பேசியதாக  சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது புகார் எழுந்துள்ளது.

அரசியல்வாதிகளிடம் பவ்யம், சாமானிய மக்களிடம் அராஜகம்: சாத்தன்குளம் குறித்து பிரபல நடிகரின் நீண்ட பதிவு

சாத்தான்குளம், தந்தை-மகன் லாக்கப் மரணம் குறித்து ஒருசில நடிகர்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய ஆவேசமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்