close
Choose your channels

அமெரிக்கா: மாயமான இந்தியர் மற்றும் அவரது மகள் உடல்கள் மீட்பு

Tuesday, April 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவை சேர்ந்த சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 6ஆம் தேதி அமெரிக்காவில் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமாகினர். இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் மாயமான இந்தியரின் குடும்பத்தினர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தீப்பின் மனைவி செளம்யாவின் உடலை சமீபத்தில் போலீசார் கைப்பற்றினர். மேலும் இவர்கள் சென்ற காரின் சில பகுதிகளும், காரில் இருந்த சில பொருட்களும் மீட்கப்பட்டது. இதனையடுத்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இவர்கள் சென்ற கார் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சந்தீப் மற்றும் அவரது மகள் சாச்சி ஆகியோர்களது உடல்களும் மீட்கப்பட்டன. இந்த இரண்டு உடல்களும் காணாமல் போன காரில் இருந்ததாகவும், இந்த கார் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு கரையொதுங்கியதாகவும் அமெரிக்க போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் மகன் சித்தாந்த்தை போலீசார் தேடி வருகின்றனர். சித்தாந்த் ஒருவராவது உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சந்தீப் மகன் சித்தாந்தை கண்டுபிடிக்க உதவிசெய்யுமாறு அவரது குடும்பத்தினர் சமூக வலைத்தள பயனாளிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.