வழக்கம்போல் இன்றும் புதிய உச்சம்: இன்றைய தமிழகம், சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 1000, 1500 என்று இருந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது கிட்டத்தட்ட 2000ஐ நெருங்கிவிட்ட அதிர்ச்சி செய்தி தான் இன்று வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 1927 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 36,841 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1927 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1390 பேர்கள் என்பதும், இதனால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு 25,973ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று கொரோனாவுக்கு 19 பேர்கள் பலியாகியுள்ளதால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவில் இருந்து 1008 பேர் குணமாகியுள்ளனர் என்பதும், இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,333 பேர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று 17675 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் இதுவரை மொத்தம் 638,856 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது