இளம்பெண்ணை கொலை செய்த கணவரும் கொழுந்தனாரும்.. டிக்டாக் அடிமையால் ஏற்பட்ட விளைவு

  • IndiaGlitz, [Saturday,December 28 2019]

டிக்டாக் செயலி இளைஞர்கள் பலரை அடிமைப்படுத்தி வந்த நிலையில் இதனால் குடும்பத்தில் பல விபரீதங்கள் நடந்து வரும் சம்பவங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் 19 வயது இளம்பெண் ஒருவரை அவரது கணவரும் கொழுந்தனாரும் சேர்ந்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆந்திர மாநிலம் குண்டூர் ஊரைச் சேர்ந்த நாசரேத்பேட்டை என்ற பகுதியில் சின்ன நரசையா என்பவரது மனைவி சுவர்தா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சுவர்தாவுக்கு அடிக்கடி டிக்டாக்வீடியோ பதிவிடுவதில் விருப்பமாக இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் சுவர்தா டிக் டாக் வீடியோவிற்கு அடிமையாகி தினமும் பல வீடியோக்களை பதிவு செய்து கொண்டு வந்திருக்கிறார்

இதனை அவரது கணவர் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் ஏற்பட்ட சண்டையில் ஒருமுறை தனது குழந்தையை எடுத்துக்கொண்டு தனியாக லாட்ஜில் ரூம் போட்டு தங்கி உள்ளார். அங்கும் அவர் வீடியோவை பதிவு செய்ததால் குடும்ப மானம் கப்பலேறி உள்ளது. இதனால் மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்த சின்னநரசையா, அதன் பின் அவரை கொலை செய்ய முடிவு செய்து இருக்கிறார்

சின்னநரசையாயும் அவருடைய சகோதரரும் சேர்ந்து சுவர்தாவை கொலை செய்து அருகில் உள்ள சுடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அண்ணன் தம்பி இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

டிக்டாக் செயலிக்கு அடிமையான ஒரு பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது