ஒரே தெருவில் 19 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், சென்னையில் ஊரடங்கு இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் மக்கள் தொகை அதிகம் என்ற ஒரு காரணம் இருந்தாலும் சென்னை மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்த நிலையில் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியின் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஏற்கனவே 16 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐஸ்ஹவுஸ் வி.ஆர்.பிள்ளை தெருவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

ஐஸ்ஹவுஸ் பகுதியில் கொரோனா வைரஸ் பாதித்த ஒரு நபரின் வீட்டில் குடியிருந்த 11 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐஸ்ஹவுஸ் பகுதியில் தன்னார்வலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரிடம் உதவி பெற்ற அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு உத்தரவும், ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது

ரூ.100 அபாரதம், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல்: சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் என்பது எவ்வளவு பொருத்தம்! அஜித்துக்கு பிரபல நடிகை வாழ்த்து

சமூக வலைத்தளத்தில் கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் மோதுவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் எல்லை மீறியபோது

தொழிலாளர் தினத்தில் கமல் வெளியிட்ட சின்னம்: இணையத்தில் வைரல்

இன்று மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் காலையிலேயே தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில்

உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா? கஸ்தூரியின் பதிலடியால் அதிர்ச்சியில் ரசிகர்

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இருப்பதால்  மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில்