17 வயது இளம்பெண்ணை விரும்பிய இருவர்: கொலையில் முடிந்த காதல்!

  • IndiaGlitz, [Thursday,December 19 2019]

வேலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவரை ஒரே நேரத்தில் இரண்டு பேர் காதலித்ததாகவும் இருவரும் தங்களை தன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தியதாகவும், இந்த காதல் கடைசியில் கொலையில் முடிந்துள்ளதாகவும் வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வேலூரை அடுத்த அரியூர்க்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த நிவேதா பிளஸ் டூ முடித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அதே மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர் ஒருவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நிவேதாவுடன் கேண்டீனில் வேலை பார்த்த இன்னொரு இளைஞரும் நிவேதிதாவை விரும்பியிருக்கிறார்.

இருவரும் ஒரே நேரத்தில் நிவேதாவை விரும்பியதை அடுத்து இருவரும் தன்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என நிவேதாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி நிவேதா திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நிவேதாவை தேடிவந்தனர்

இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் இளம்பெண் ஒருவர் சடலமாக இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அந்த இளம் பெண்ணின் உடலில் உள்ள அடையாளங்களை வைத்து பார்க்கும்போது இறந்தது நிவேதா தான் என்பது உறுதி செய்யப்பட்டது

பின்னர் இதுகுறித்த விசாரணையில் ஒரே நேரத்தில் இருவரும் நிவேதாவை காதலித்ததால் அந்த இருவரில் ஒருவர் இந்த கல்குவாரியில் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிவேதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் தெரிவித்துள்ளனர்
 

More News

செல்போன் கடையை உடைத்து தானாகவே எக்சேஞ்ச் செய்த திருடன்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் செல்போன் கடை ஒன்றில் பூட்டை உடைத்து ஒரே ஒரு போனை மட்டும் திருடி, அதற்கு பதிலாக தன்னுடைய பழைய போனை செல்போன் கடையில் வைத்து விட்டு தானாகவே எக்சேஞ்ச்

சிவகார்த்திகேயனுடன் கனெக்ட் ஆன தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கேரக்டரில் நடந்த நிகழ்வுகள் அப்படியே நிஜ கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 

'தலைவர் 168' படத்தில் இணைந்த 'கபாலி' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் பிரமாண்டமான திரைப்படமான 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு

நடிகை அஞ்சலியுடன் திருமணமா? மனம் திறந்த ஜெய்

தமிழ் திரையுலகில் இளையதலைமுறை கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், நடிகை அஞ்சலியை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும்

தனுஷ் பட தயாரிப்பு நிறுவனத்தின் பரபரப்பு அறிக்கை!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் 40வது படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.