சொந்த ஊரை நோக்கி நடந்து சென்ற தொழிலாளர்கள் மீது மோதிய ரயில்: 17 பேர் பரிதாப பலி

  • IndiaGlitz, [Friday,May 08 2020]

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த சுமார் இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் எந்த போக்குவரத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நடந்தே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் செல்கின்றனர். இவ்வாறு நடந்து செல்லும்போது வெயிலின் தாக்கம் தாங்காமலும், உடல்நலக் குறைவாலும் ஒரு சிலர் உயிரிழந்தனர் என்பது சோகமான சம்பவங்களாக இருந்தது

இந்த நிலையில் அவுரங்காபாத் அருகே வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது அதிகாலை நேரத்தில் சோர்வு காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது அதிகாலை 4 மணிக்கு அந்த பக்கமாக வந்த சரக்கு ரயில், தண்டவாளத்தில் படுத்து இருந்த தொழிலாளர்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளது

சொந்த ஊரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் மோதி 17 உயிர்கள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, கொள்ளையரையும்‌ வெளியேற்றும்‌ காலம்‌ நெருங்கிவிட்டது: கமல்ஹாசன்

உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும்

கொரோனாவின் 53 புதிய மரபணு வரிசைகளை வெளியிட்ட இந்திய விஞ்ஞானிகள்!!!

கொரோனா வைரஸ் பரவல் பற்றிய தன்மைகளைப் புரிந்து கொள்ள உலகம் முழுவதும் ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷின் 'பிளான் பி' இதுதான்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை விஜய் சேதுபதி அறிவிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை

நெய்வேலியில் பாய்லர் வெடித்து விபத்து: 10 பேர்கள் படுகாயம்

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென இன்று காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில்

மது அருந்திவிட்டு வந்த கணவர், மகளுடன் தீக்குளித்த மனைவி: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று முதல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது.