6 மணி நேரம் பப்ஜி விளையாடிய சிறுவன் பரிதாப மரணம்

  • IndiaGlitz, [Friday,May 31 2019]

மத்திய பிரதேச மாநிலத்தில் மொபைல்போனில் தொடர்ந்து ஆறு மணி நேரம் பப்ஜி விளையாட்டை விளையாடிய சிறுவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

மத்திய பிரதேசத்தில் பர்தூர் என்ற 16 வயது சிறுவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுவன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் உடனே மொபைல் போனை கையில் எடுத்து பப்ஜி விளையாட்டை விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ எடுத்து கூறியும் பப்ஜி விளையாட்டை இந்த சிறுவன் விடுவதில்லை.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தொடர்ந்து ஆறு மணி நேரம் பப்ஜி விளையாட்டை மும்முரமாக விளையாடி கொண்டிருந்த பர்தூர் திடீரென நெஞ்சை பிடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பர்தூரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

தனது சகோதரர் மறைவு குறித்து பர்தூரின் தங்கை கூறியபோது, 'என் அண்ணன் எப்போதும் பப்ஜி விளையாட்டை விளையாடி கொண்டிருப்பார். நாங்கள் எவ்வளவோ முறை கூறியும் அவர் இந்த விளையாட்ட்டை நிறுத்துவதில்லை. அந்த விளையாட்டே தற்போது அவருடைய உயிரை குடித்துவிட்டது' என்று கூறியுள்ளார்.

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி பல இளைஞர்களின் உயிர்கள் பலியாகியுள்ள நிலையில் இந்த விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

More News

என்.ஜி.கே' ரிலீஸ் தினத்தில் ரசிகர்களுக்கு சூர்யாவின் மெசேஜ்!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில்

சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் சசிகுமார்!

நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்று நேற்று அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ்நாடு அரசியலில் குதிக்கின்றாரா ஸ்ரீரெட்டி?

தமிழக அரசியல் களம் எப்போதுமே திரை நட்சத்திரங்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் என்பது தெரிந்ததே

எனக்கு நேசமணின்னா யாருன்னே தெரியாது: ராதாரவி

உலக அளவில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் 'பிரெண்ட்ஸ்' நேசமணிக்கு பெயிண்டிங் காண்ட்ராக்ட் கொடுத்ததே ராதாரவி என்பதை யாரும் மறந்திருக்க முடியாது

மோடி பதவியேற்பு விழாவுக்கு அஜித்-விஜய் பட நாயகிக்கு அழைப்பு! ஆனால்...

பிரதமர் மோடி பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்னும் சிலமணி நேரங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள அஜித்,