சென்னையில் குறைந்தது கொரோனா: ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினந்தோறும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன்  இன்றைய பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்வு என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,245ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு பின் சென்னையில் கொரோனா பாதிப்பு 1000க்கும் குறைவாக உள்ளது ஆறுதல் அளிக்கின்றது

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 49 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த பேர் 1438 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இதனையடுத்து 26,782 பேர் மொத்தம் தமிழகத்தில் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் 19,242 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது