எனது பயணம் சரியான திசையில் உச்சத்தை நோக்கி செல்கிறது: 15 ஆண்டு பயணம் குறித்து விஷ்ணு விஷால்..!

  • IndiaGlitz, [Monday,January 29 2024]

விஷ்ணு விஷால் நடித்த முதல் திரைப்படம் ஆன ’வெண்ணிலா கபடி குழு’ வெளியாகி 15 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த படம் குறித்தும் தனது 15 ஆண்டு கால திரையுலக பயணம் குறித்தும் விஷ்ணு விஷால் உணர்வு பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கை வைரல் ஆகி வருகிறது. அந்த அறிவிப்பில் அவருக்கு ஒரு இருப்பதாவது:

என் முதல் படமான ’வெண்ணிலா கபடி குழு’ வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த, என் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுக்கு, இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன், எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன்.
எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்த வித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்த விடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

எனது பதினைந்து வருட பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயன்றிருக்கிறேன், இதுவரை நான் நடித்துள்ள 20 படங்களில், பாதிக்கு மேல் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில், என்றென்றும் வாழும் என்பதே எனக்குப் பெருமை.

என் திரைப்பயணத்தின் இந்த 15-வது ஆண்டு எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. ‘லால் சலாம்’ எனும் அற்புதமான படத்தில், நம் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமை மற்றும் சிறந்த மனிதரான, மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது பயணம் சரியான தருணத்தில் சரியான திசையில் உச்சத்தை நோக்கி செல்வது மகிழ்ச்சி.! இந்தப் பயணத்தில் இதுவரை என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு படத்திலும் பணியாற்றிய லைட்மேன்கள் முதல் எனது உதவியாளர்கள் வரை, அனைத்து படக்குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் பணிகளை பற்றி, நேர்மையாக விமர்சனங்களைத் தந்து, நான் சரியான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்க ஊக்கம் தந்த, விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நான் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில், எனக்கு மிகப்பெரும் ஆதரவாக, எனது குடும்பம் இருந்தது. நல்லது கெட்டது இரண்டிலும் எப்போதும் தோள் கொடுக்க முன்வரும் என் பெற்றோர், மனைவி, சகோதரிகள், சகோதரன் மற்றும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அடுத்து வெளிவர இருக்கும் பல சுவாரஸ்யமான படைப்புகளில் நான் இணைந்திருக்கிறேன் என்பது, எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. இந்நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ’வாழ்க்கை உங்களை சோதிக்கும், உங்கள் திறமைக்கு பல சவால்களை தரும், ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன், உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி, வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது.!

More News

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை வாங்கிய ரெட் ஜெயண்ட் நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விஜய் ஆண்டனி நடித்த அடுத்த  படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை  ரெட் ஜெயண்ட்  பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வந்தால் மட்டும் போதாது.. இதையும் செய்ய வேண்டும்: 80s நடிகை பேட்டி..!

 தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வந்தால் மட்டும் போதாது, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்க வேண்டும் என்று 80களில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.  

வெங்கட் பிரபுவை காணவில்லை.. விஜய் பட வில்லன் நடிகர் பதிவால் பரபரப்பு..!

வெங்கட் பிரபுவை காணவில்லை என விஜய் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் ரக்சிதா நடிக்கும் படம் பெண்களுக்கு எதிரானதா? 'எக்ஸ்ட்ரீம்' குறித்து இயக்குனர் ராஜவேல்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ரக்சிதா மகாலட்சுமி நாயகி ஆக நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் இந்த படம்

கமல்-எச் வினோத் படத்திற்கு இன்னும் உயிர் இருக்குதா? புதிய தகவல்..!

கமல்ஹாசன் நடித்து, தயாரிக்கும் ஒரு திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.