எல்லா புகழும் அவருக்கே: 15 ஆண்டு 'பருத்தி வீரன்' குறித்து நெகிழ்ச்சியுடன் கார்த்தி!

  • IndiaGlitz, [Wednesday,February 23 2022]

கடந்த 2007ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘பருத்தி வீரன்’ தற்போது 15 ஆண்டுகாலம் என்ற மைல்கல்லை தொட்டிருக்கும் நிலையில் இது குறித்து நெகிழ்ச்சியுடன் கார்த்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் எனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் அவர்கள் வடிவமைத்து கொடுத்ததுதான், எனவே எல்லா புகழும் அவருக்கே. நான் கற்றுக்கொண்ட பாடங்களும் நான் செய்யும் ஒவ்வொரு வேலையும் அவர் கற்றுக்கொடுத்ததுதான். அவர் கற்று கொடுத்ததை தான் நான் இன்னும் பின்பற்றுகிறேன். அவருடன் பணிபுரிந்ததை நான் ஒரு பொக்கிஷமாக கருதுகிறேன்.

இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச்சென்ற அமீர் அவர்களுக்கும் ஞானவேல், அண்ணா, எனது ரசிகர்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தற்போது ’பொன்னியின் செல்வன்’, ’சர்தார்’, ’விருமன்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'காதலுக்கு மரியாதை' பட நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' உள்பட ஒரு தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை லலிதா என்பவர் காலமானார்.

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு!

நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த தீர்ப்பு வெளியாகியது. அந்த தீர்ப்பில் நடிகர் சங்கத் தேர்தல் செல்லும்

மாநிலங்களவை உறுப்பினராகும் பிரபல நடிகர்… ரசிகர்கள் மகிழ்ச்சி!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவரும் நடிகர் பிரகாஷ் ராஜ்

சினிமாவில் அறிமுகமாகிறாரா ஷாருக்கின் மகள்? மகிழ்ச்சியான தகவல்!

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம்வரும் நடிகர் ஷாருக்கானின் மகள்

நயனுடன் எனக்கு இருக்கும் உறவு… மனம் திறந்த நடிகை சமந்தாவின் வைரல் பதிவு!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா சமூகவலைத் தளப்பக்கங்களில் எப்போதும்