சென்னை மெரீனாவில் திடீர் 144 தடை. நடைப்பயிற்சி செல்ல முடியுமா?

  • IndiaGlitz, [Sunday,January 29 2017]

சென்னை மெரீனாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் நேற்று அறிவித்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை மெரீனாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த தடை உத்தரவு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

கடந்த வாரம் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து மீண்டும் மெரீனாவில் மாணவர்கள் கூட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வந்து கொண்டிருப்பதை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மெரினாவில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பினும் சுற்றுலா பயணிகள், குடும்பத்தினர், குழந்தைகள், நடை பயிற்சி செல்வோர் ஆகியோர்களுக்கு அனுமதி உண்டு என்று காவல்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் காவல்துறையினர்களின் தடை காரணமாக இன்று காலை மெரினாவில் நடைப்பயிற்சி செல்வோரின் கூட்டம் குறைந்து இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

சீனுராமசாமியின் அடுத்த படத்தில் சூப்பர் ஹிட் ஜோடி

சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதி, தமன்னா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் இன்னும் சொல்லப்போனால் பிரபல அரசியல்வாதிகளிடம் இருந்தும் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது...

'தல 57' குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் தேதி

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழில் இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியதில் இருந்து எதிர்பார்ப்பின் விகிதம் எகிறியது...

பிரபல நடிகையின் தாத்தா காங்கிரசில் இருந்து திடீர் விலகல்

முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மகாராஷ்டிரா மாநில கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். மேலும் அவர் காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

நான் என்ன தவறு செய்தேன்? கமல்ஹாசனின் வேதனை டுவீட்

மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த போராட்டத்தில் சினிமாக்காரர்கள் நுழைந்து பெயர் தேட வேண்டாம் என்றும், போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியபோது தைரியமாக அதை தட்டிக்கேட்டதும் கமல்ஹாசன் மட்டுமே...

புதிய போராட்டமா? மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் சென்னை மெரீனாவில் நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் உலக தமிழர்களை எழுச்சி அடைய செய்தது. அதுமட்டுமின்றி இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் சட்டம் அமலுக்கு வந்தது...