சிறுமியை கற்பழித்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த 12ஆம் வகுப்பு மணவன்

திண்டுக்கல் அருகே 7ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், அந்த சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

திண்டுக்கல் அருகே மோர்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, பெற்றோர்கள் வேலைக்கு சென்றதால் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்ற பெற்றோர்கள் திரும்பி வந்து பார்த்தபோது சிறுமியின் கையில் மின்சார வயர் இருந்ததும், அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன், அந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
 

More News

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 20 ரூபாய் நோட்! பழைய பணம் செல்லுமா?

ரிசர்வ் வங்கி ஏற்கனவே, ரூ.2000 ,ரூ. 500 , ரூ.200 , ரூ.100 , ரூ.50 , ரூ.10 ஆகிய புதிய பணங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில்...

16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கை வேண்டாம்: உயர்நீதிமன்றம் ஆலோசனை

16 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அவர்கள் மீது போக்சோ சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்

கார்த்தி-ஜோதிகா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பேய்க்கு பதில் பாம்பு: ராகவா லாரன்ஸின் புதிய திட்டம்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 3' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இருப்பினும் 'காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் போலவே

அடுத்த பிறவியில் ஐபிஎஸ் அதிகாரி: பிரபல நடிகையின் ஆசை

அடுத்த பிறவியில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக மாற ஆசை என பிரபல தமிழ் நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.