சென்னையில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேல்!

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவதை விட 1200க்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளார்கள் என்பதே பொருத்தம்

ஆம், இன்று தமிழகத்தில் 1286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1286 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 1012 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,597ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் முதல்முறையாக 24 மணி நேரத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சென்னை மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியாக உள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316 என உயர்ந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 14,101 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 528,534 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

More News

ஒரே படத்தில் விக்ரம்-துருவ் விக்ரம் இணைகின்றார்களா? ஆச்சரிய தகவல்

சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' என்ற திரைப்படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதற்கு பிரபல நடிகை கண்டனம்!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிட கொடுத்து கிராம மக்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிஷ்கின் - அருண்விஜய் இணையும் படம் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

பிரபல இயக்குனர் மிஷ்கின், விஷால் நடித்த 'துப்பறிவாளன் 2' என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அவருக்கும் விஷாலுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 'துப்பறிவாளன் 2'

கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா-கார்த்தி பட நாயகி?

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல் முதலாக தங்கம் பெற்று தந்தவருமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக

பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் சென்ற மணமக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மணமக்கள் தங்களுடைய திருமணத்தை ஒரு சிலர் எதிர்ப்பதாகவும், அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.