close
Choose your channels

தமிழகத்தில் இன்று 121 கொரோனா பாசிட்டிவ்: சென்னையில் மட்டும் 103

Tuesday, April 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 121 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2058ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 121 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 103 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் மட்டும் 673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவரும், நாமக்கல் மாவட்டத்தில் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்ததையடுத்து, இதுவரை கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos