கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: 12 வயது சிறுவன் பலியானதால் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Sunday,September 05 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த பாதிப்பை விட தற்போது பல மடங்கு குறைந்து உள்ளது என்பதும் தெரிந்ததே. ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று கூட சுமார் 30 ஆயிரம் பேர் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் அங்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் நிபா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் கேரளாவில் பரவியுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இது குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு ஒன்று கேரள மாநிலம் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக மருத்துவ நல்வாழ்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

More News

அனுவை அடுத்து விஷ்ணு, பிரக்ரிதியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்ற வெள்ளைப் புலியைப் தத்தெடுத்தார் என்பது தெரிந்ததே. 10 வயதாகும் அந்த வெள்ளைப்புலிக்கு

ரியோவில் கிடைத்த தங்கம் டோக்கியோவில் கிடைக்காதது ஏன்? மாரியப்பன் தங்கவேலு விளக்கம்!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும், அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பலர் பாராட்டினர் என்பதும் தெரிந்ததே.

ரஷ்யாவில் போனிகபூருடன் அஜித்: வைரல் புகைப்படம்!

'வலிமை' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக தல அஜித் மற்றும் படக்குழுவினர் ரஷ்யா சென்று இருந்தார்கள் என்பதும் அங்கு ஒரு சில நாட்கள் ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளை படமாக்கி

ரஷ்யாவிலும் தொடரும் அஜித்தின் உதவி: வைரல் புகைப்படங்கள்!

தல அஜித் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த மனிதர் என்பதும் அஜீத்தின் நடிப்பை பிடிக்காதவர்கள் கூட அவருடைய மனிதநேயத்தை பாராட்டி வருவார்கள் என்பதும் தெரிந்ததே.

இயக்குனர் மாரி செல்வராஜூக்கு ஏற்பட்ட இழப்பு: புகைப்படத்துடன் இரங்கல்!

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' திரைப்படத்தில் நடித்த குதிரை ஒன்று இறந்ததை அடுத்து அவர் அந்த குதிரையுடன் கூடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில்