சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்? மபியில் நடந்த பரிதாபச் சம்பவம்!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் கடந்த 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் செயல்படுத்தப் பட்டது. இந்நிகழ்வின்போது மத்தியப் பிரதேச மாநிலம் யாவத்மால் மாவட்டத்தின் ஒரு பகுதியில் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், அங்கு வந்த 12 குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்குவதற்கு பதிலாக சானிடைசரை தவறுதலாக கொடுத்து விட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் சானிடைசரால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். மேலும் தற்போது அவர்கள் நல்ல உடல்நிலையில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவத்தை அடுத்து யாவத்மால் பகுதியில் பணியாற்றிய 3 ஆஷா பணியாளர்கள் சஷ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் போலியோ நோய்த்தொற்று இல்லாத நாடாக இந்தியா வளர்ந்து உள்ளது. இந்நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்போது சுகாதாரப் பணியாளர்கள் தவறு செய்து இருப்பது கடும் கண்டனத்தை சந்தித்து இருக்கிறது.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திற்கு சம்பளம் ரூ.55 கோடியா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக மட்டுமன்றி வில்லன் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு இந்தி வெப்தொடர் ஒன்றில் நடிக்க

விவசாயிகள் போராட்டம்: நடிகை ரிஹானாவை அடுத்து மேலும் ஒரு நடிகை ஆதரவு!

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேலையை ராஜினாமா செய்த உலகின் இராண்டாவது பெரிய பணக்காரர்!

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி எனப் பல பதவிகளை வகித்து வரும் ஜெஃப் பெசோஸ் தன்னுடைய சிஇஓ பதவியில் இருந்து விலக உள்ளார்

'மாஸ்டர்' திரைப்படத்தை ஓடிடியில் பார்த்தது இத்தனை மில்லியன் பேரா? ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த திரைப்படம் இரண்டே வாரங்களில் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது

27 வயதில் 20 கின்னஸ் ரெக்கார்ட்… பாப் இளவரசியின் தடாலடி அசத்தல்!

பாப் இசை உலகில் சமீபகாலமாக கொடிகட்டிப் பறந்து வரும் பாடகி Ariana Grande. அமெரிக்காவை சேர்ந்த இவர் பாடுவதில் மட்டுமல்ல சிறந்த நடிப்புக்காகவும் சிறந்த வடிவமைப்புக்காகவும் பெயர் பெற்றவர்.