ஆண் நண்பருடன் சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

ஃபேஸ்புக் நட்பின் மூலம் கல்லூரி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் நாசமான அதிர்ச்சி சம்பவத்தில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பரால் சீரழிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று தக்கலை என்ற பகுதியில் நடந்துள்ளது.

தக்கலையில் உள்ள கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் பொதுத்தேர்வு முடிந்தது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை அவருடைய ஆண் நண்பர் நிதின், பைக்கில் ஊர்சுற்றலாம் என்று அழைத்து சென்றுள்ளார். ஆனால் திடீரென நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்யலாம் என்று ஆசை காட்டிய நிதின், இடையில் 18 வயது சிறுவன் ஒருவனையும் அதே பைக்கில் ஏற்றியுள்ளார்.

இந்த நிலையில் சிறுவனின் உறவினர் வீட்டுக்கு செல்லலாம் என்று அந்த மாணவியை அழைத்து சென்ற நிதின், அந்த வீட்டில் மாணவியை நிதினும் அந்த சிறுவனும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்த யாரிடமும் சொல்லக்கூடாது என்று வீடியோவை காட்டியும் மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் நிதினின் செல்போன் மூலம் அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார், மாணவியை மீட்டதோடு, நிதினையும், சிறுவனையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆண் நண்பர்கள் என்ற வேடத்தில் இருக்கும் இதுபோன்ற கயவர்களிடம் இளம்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே இந்த கொடூர சம்பவம் கற்று கொடுத்த பாடமாக உள்ளது.
 

More News

பாஜக வேட்பாளராகும் கமல்-விஜயகாந்த் பட நாயகி!

கமல்ஹாசன் நடித்த 'சலங்கை ஒலி', தசாவதாரம்', 'விஜயகாந்த் நடித்த 'ஏழை ஜாதி', உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதா, பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மாத்திரை சாப்பிட்டு நயன்தாரா படம் பாருங்கள்: ராதாரவிக்கு சமந்தா ஆலோசனை

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து நேற்று திரையுலகினர்களை மட்டுமின்றி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது

ஒரு பெண் எப்படி வாழ்கிறாள் என்று யாரும் பேசக்கூடாது: நயன்தாரா விவகாரம் குறித்து குஷ்பு

'கொலையுதிர்க்காலம்' சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்காத திரையுலகினர்களே இல்லை

ராதாரவி விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை

நடிகர் ராதாரவி சமீபத்தில் நயன்தாரா  நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.