கோயம்பேடு சந்தையால் 119 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: 

சமீபத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நான்கு நாட்கள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் நான்கு நாட்களுக்குரிய காய்கறிகள், மளிகைப்பொருட்களை வாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்காக சுமார் 50ஆயிரம் பேர் குவிந்ததாக கூறப்படுகிறது. தனிமனித இடைவெளி, சமூக விலகல், மாஸ்க் அணிதல் ஆகிய அரசின் அறிவுரை காற்றில் பறக்கவிடப்பட்டு பொறுப்பின்றி நடந்துகொண்டவர்களால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது தெரிய வந்துள்ளது

கோயம்பேடு சந்தையால் நேற்று சுமார் 50 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கோயம்பேடு சந்தை மூலம் இதுவரை 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 119 பேர்களில் சென்னையில் 52 பேர், கடலூரில் 17 பேர், அரியலூரில் 22 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், விழுப்புரத்தில் 20 பேர் என தெரிய வந்துள்ளது. மேலும் பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பதும் இவரும் கோயம்பேடு சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்றவர்கள் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இவர்களில் 550 பேர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்பதும் இந்த முடிவுகள் வந்த பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது

More News

கொரோனா அச்சம்!!!10 ஆயிரம் சிறை கைதிகளை வீட்டிற்கு அனுப்பிய பிலிப்பைன்ஸ்!!!

கொரோனா பரவல் தடுப்புக்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வடதுருவ ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை தானாக மூடிக்கொண்டது!!! அறிவியல் காரணங்கள் என்ன???

மனிதர்கள் ஏற்படுத்திய கடுமையான மாசுபாட்டால் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய ஓட்டையை உண்டாகியிருந்தது.

இன்றும் 200க்கும் மேல் தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமாகவும் நேற்று 200க்கும் அதிகமாகவும் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 231 பேர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று

இதுதாண்டா மரண மாஸ்க்!

சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து கொண்டே இருப்பதால் தகுந்த காரணம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய காரணத்தால் வெளியே வந்தால்

பிக்பாஸ் தமிழ் நடிகை பாடிய முதல் பாடல்: இணையத்தில் வைரல்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகையுமான ஜனனி ஐயர் பாடிய முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.