லாட்டரி வாங்க காசு கூட இல்லாத 11 பெண் தூய்மை பணியாளர்கள்…. கோடீஸ்வரர் ஆன தகவல்…!

  • IndiaGlitz, [Friday,July 28 2023]

கேரளாவில் அதிகாரப்பூர்வமாக லாட்டரி விற்பனைக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அரசாங்கமே அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதால் அவ்வபோது சிலர் ஜாக்பாட் அடித்து ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் 11 தூய்மை பணியாளர்கள் இந்த முறை கோடீஸ்வரர்களாக மாறியிருப்பது பலரிடையே சுவாரசியத்தையும் கூடுதல் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பரப்பனங்கடி நகராட்சி பகுதியில் ஹரித கர்ம சேனா குழு எனும் அமைப்பை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் அப்பகுதிகளில் உள்ள மக்காத குப்பைகளை வீடு வீடாகச் சென்று அகற்றி வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் 9 பெண்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு எப்போதும்போல டீ அருந்துவதற்காக அமர்ந்திருந்தபோது லாட்டரி வங்கலாம் என்று சிந்தித்துள்ளனர்.

இதையடுத்து ஆளுக்கு ரூ.25 என்கிற வீதம் பணத்தைப் போட்டு ரூ.250 மான்சூன் பம்பர் பிஆர்92 டிக்கெட்டை வாங்க முயற்சித்து உள்ளனர். பம்பர் பரிசு என்பது பொதுவாக பெரிய தொகையை கொண்டிருக்கும். அப்படி மழைக்காலத்தை ஒட்டி ரூ.10 கோடி பம்பர் பரிசு லாட்டரியை வாங்குவதற்காக முயற்சித்தபோது அப்பெண்களிடம் காசு பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் ரூ.12.50 தொகைக்காக தங்களுக்குத் தெரிந்த மற்றொரு பெண்ணை அந்தக் குழு சேர்த்துக்கொண்டு ஒரு வழியாக 11 பெண்கள் சேர்ந்து ரூ.250 ஒரு லாட்டரியை வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் மழைக்கால பம்பர் பரிசு ரூ.10 கோடிக்கான பரிசுத்தொகை புதன்கிழமை அறிவிக்கப்பட்டு இருககிறது. அதில் எம்பி200261 என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கிய 11 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 கோடிக்கான ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதையடுத்து 11 பெண்களும் ஒரே நாளில் கோடீஸ்வரிகளாக மாறியுள்ளனர்.

இதற்கு முன்பு கேரளா பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியபோது இந்தப் பெண்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை கிடைத்தாகவும் இதனால் 4 ஆவது முறையாக தற்போது லாட்டரி வாங்கியதில் கோடீஸ்வரிகளாக மாறியிருப்பதாகவும் கூறியுள்ள நிலையில் இன்னும் எங்களால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் மழைக்கால பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி முதல் பரிசு, ரூ.10 லட்சம் இரண்டாம் பரிசு, 5 லட்சம் மூன்றாம் பரிசு, அடுத்து 3 லட்சம், கடைசியாக 1 லட்சம் வரை பல்வேறு பரிசுகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த தகவல்கள்.. ரியல் பான் - இந்திய நட்சத்திரம்..!

நடிகர் தனுஷ் ஏற்கனவே தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில படத்தில் நடித்துள்ளதால் அவர் பான் - இந்திய ஸ்டாராக கருதப்படுகிறார். இந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் அவர் தமிழ்,

மாலத்தீவை அடுத்து ஆன்மீக பயணம்.. ரஜினிகாந்த் எங்கே செல்கிறார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஓய்வு எடுக்க மாலத்தீவு சென்ற நிலையில் அடுத்ததாக ஆன்மீக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

மீண்டும் ரிலீஸான 'ஒருமனம்' பாடல்.. ஆனால் மிகப்பெரிய மாற்றம்.. 'துருவ நட்சத்திரம்' அப்டேட்..!

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென கிடப்பில் போடப்பட்டது.

பூமியின் சொர்க்கம்.. இதைவிட அருமையான சூரிய உதயத்தை பார்க்க முடியுமா? சமந்தாவின் வைரல் வீடியோ..!

 நடிகை சமந்தா சில மாதங்கள் நடிப்பில் இருந்து  விலகி முழு ஓய்வு எடுக்க முடிவு செய்ததாகவும் இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஈஷா தியான மையம், வேலூர் தங்க கோவில் உள்பட சில ஆன்மீக

தனுஷின் ஆக்ரோஷம், துப்பாக்கி குண்டுகளின் முழக்கம்.. 'கேப்டன் மில்லர்' டீசர் எப்படி இருக்கிறது?

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.